இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக ஆடிய இரண்டு டெஸ்ட் தொடர்களில் அடைந்த மோசமான தோல்வி, சீனியர் முதல் ஜூனியர் வரை இந்திய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களையும் ரஞ்சி டிராபியில் விளையாடும் கட்டாய நிலைக்குத் தள்ளியது.
அதன்படி, 9 ஆண்டுகளுக்குப் பிறகு ரோஹித்தும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோலியும் ரஞ்சியில் களமிறங்கினர். ஆனால், இரண்டு பேருமே சமீபகால சொதப்பல் ஃபார்மை விட்டுக்கொடுக்காமல் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
விராட் கோலிஅதிலும், விராட் கோலி களமிறங்கிய ஆட்டத்தைக் காண டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பெருமளவில் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால், ரயில்வேஸ் அணியின் ஹிமான்ஷு சங்வான் பந்துவீச்சில் ஸ்டம்ப் பறக்க கிளீன் போல்டாகி 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார் கோலி. இதில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு, ``அவர் ரஞ்சி விளையாடத் தேவையில்லை. 81 சதங்கள் அடுத்தவரின் நுட்பம் நன்றாகவே இருக்கிறது. அவரை வற்புறுத்த வேண்டாம்.' என்று கோலிக்கு ஆதரவாகப் பேச, மறுபக்கம் கோலியின் வருகையால் ரஞ்சி டிராபி ஆசிர்வதிக்கப்பட்டது போலாகிவிட்டது என்று ரசிகர்கள் சிலாகித்தனர்.
இந்த நிலையில்தான், ``வீரர்களுக்குத்தான் கிரிக்கெட் முக்கியம், கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமல்ல." என்று அதிரடியான கருத்தை தெரிவித்திருக்கிறார் சமீபத்தில் ஓய்வுபெற்ற இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய அஸ்வின், `` `ரஞ்சி டிராபி ஆசிர்வதிக்கப்பட்டது' என்று ஒரு ட்வீட்டைப் பார்த்தேன். நான் கேட்கிறேன், ரஞ்சி டிராபியின் வரலாறு தெரியுமா... பல ஆண்டுகளாக இது நடைபெற்று வருகிறது. இது ஒரு முதன்மையான தொடர்.
ரவிச்சந்திரன் அஸ்வின்சச்சின் ஒரு லெஜண்டரி கிரிக்கெட்டர். அவர் எல்லா நேரமும் ரஞ்சியில் ஆடியிருக்கிறார். இதில் விளையாடுவதால் வீரர்கள்தான் பயனடைவார்கள். எனவே, வீரர்களுக்குதான் கிரிக்கெட் முக்கியமே தவிர, கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமல்ல." என்று கூறினார்.