ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்.. அரசாணை வெளியீடு..!
WEBDUNIA TAMIL February 06, 2025 04:48 PM


ஐநா மனித உரிமை காவல் நிலையிலிருந்து அமெரிக்கா விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், அதைக் கண்கவர் அறிவிப்பாக அறிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து, பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில், ஐநா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதற்கான அரசாணையை ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம், ஐநா மனித உரிமைகள் அமைப்புக்கு அமெரிக்கா இனி நிதி உதவி அளிக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மனித உரிமைகளுக்கான ஐநா பிரிவிலிருந்து அமெரிக்கா விலகுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, கல்வி, அறிவியல், கலாச்சார மேம்பாட்டுக்கான ஐநா பிரிவு யுனெஸ்கோ மற்றும் பாலஸ்தீன அகதிகள் நலனுக்கான யூ.என்.ஆர்.டபிள்யூ உள்ளிட்ட ஐநா பிரிவுகளுக்கும் அமெரிக்கா உதவிகளை மறு ஆய்வு செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட அமைப்புகளுக்கு இனி நிதி உதவி அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படுவோரை ஐநா மனித உரிமைகள் அமைப்பு பாதுகாக்கிறது என்றும், யுனெஸ்கோ அமைப்பு தொடர்ந்து யூத விரோத செயல்களில் ஈடுபடுகிறது என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.