பொதுவாக குங்கும பூவில் ஏராளமான மருத்துவ குணம் அடங்கியுள்ளது .ஆஸ்த்மா நோய்க்கு தயாரிக்கப்படும் பாரம்பரிய மருந்தில் இந்த பூ சேர்க்கப்படுகிறது .இந்த பூவின் மருத்துவ குணம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த பூ 90க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்த கூடியது .இது நமது பார்வை திறனை மேம்படுத்தும் .
2.மேலும் செரிமான சக்திக்கும் ,இந்த பூ பயன்படுகிறது .பல ஹோட்டல்களில் உணவில் கூட அழகுக்காக இந்த பூவை சேர்ப்பது வழக்கம் .
3.குங்கும பூவிற்கு நமது உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் சருமத்தின் ஆரோக்கியம், மேம்படும். மேலும் சருமம் பொலிவு பெறும்.
4.குங்கும பூவின் தைலத்தை சில சொட்டுக்கள் எடுத்து அதை உங்கள் முகத்தில் தடவி மசாஜ் செய்து ஒரு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவாக மாறும்.
5.கருவுற்ற தாய்மார்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து காய்ந்த குங்கும பூவை பாலில் கலந்து கொடுத்து வந்தால் தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.