பொதுவாக கையால் சாப்பிட்டதால் நம் முன்னோர்கள் பல நோய் நொடியின்றி ஆரோக்கியமாய் வாழந்தனர் .ஆனால் இன்றைய தலை முறையினர் மேற்கத்திய கலச்சாரத்தினை பயன் படுத்தி உணவை ஸ்பூன் மூலம் சாப்பிடுவதால் பல நோய்கள் வராமல் தடுக்க முடியவில்லை .மேலும் இப்டி வெறும் கைகளால் உண்பதால் உண்டாகும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்
.1.கைகளால் உண்பதால் உணவும் எளிதில் ஜீரணமாகும். மேலும் உணவை ரசித்து ருசித்து உண்பதற்கும் வைக்கும்.
2.ஆயுர்வேதத்தின் படி, கையால் உணவை உண்பவர்களுக்கு விரைவில் பசி ஏற்படாது. . இது எடையைக் குறைக்க உதவுகிறது.
3 .ஸ்பூன் மூலம் நம்முடைய உணவை சாப்பிடுவதால் சர்க்கரையின் சமநிலையை சீர்குலைத்து, நீரிழிவு டைப்-2 அபாயத்தை ஏற்படுத்துகிறது.
4. கையால் உணவைசாப்பிடும் போது, கைகளின் விரல்களில் இருக்கும் ஐந்து கூறுகளும் தூண்டப்பட்டு, நீங்கள் சாப்பிட வேண்டிய உணவை உற்சாகத்துடன் சாப்பிட உதவுகிறது.
5.கைகளால் உணவு உண்பதன் மற்றொரு நன்மை என்னவென்றால், உணவின் சூட்டினை அறிந்து கொள்ள முடியும்.
6.கையால் உணவு உண்ணும்போது ரத்த ஓட்டம் சீராகும்.