7 கிரகங்களும் ஒரே கோட்டில்…. பிப்ரவரி 28 முதல் தோன்றும் அரிய நிகழ்வு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!
SeithiSolai Tamil February 24, 2025 03:48 PM

வானில் சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களும் சூரியனை மையமாக வைத்து வட்டப்பாதையில் சுற்றி வருகின்றனர். இந்த கிரகங்கள் சூரியனை சுற்றும்போது, நாம் பார்த்தால் ஒரே திசையில் காட்சி அளிக்கும். அந்த வகையில் சூரிய குடும்பத்தில் உள்ள புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் உள்ளிட்ட 7 கிரகங்களின் அணிவகுப்பு வருகிற 28ஆம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை ஒரே நேர்கோட்டில் பார்க்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது. அதில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி உள்ளிட்ட கிரகங்களை வெறும் கண்களில் பார்க்க முடியும். ஆனால் யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களை பைனாக்குலர் மூலமாக பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பார்ப்பதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு விண்வெளி ஆர்வலர் கழகம் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் முதல் 2 வாரங்களில் இந்த கிரகங்களின் அணிவகுப்பு நிகழ்வை பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-ல் பார்க்கவில்லை என்றால், 2040ல் தான் 7 கிரக அணி வகுப்பை பார்க்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை மறுபடியும் பார்க்க 15 ஆண்டுகள் ஆகும் என்பதால், அறிவியல் ஆர்வலர்கள், அறிவியலில் ஆர்வம் கொண்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த நிகழ்வை காண்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் பெற்றோரும் தங்களது குழந்தைகளை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று 7 கிரக அணிவகுப்பு நிகழ்வை பார்க்க வாய்ப்புள்ளதாகவும் அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.