சேலம் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜான். இவர் அப்பகுதியில் ரௌடியாக வலம்வருகிறார். இவரின் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் குற்றவழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதனிடையே, இன்று தனது மனைவியுடன் ஜான் திருப்பூர் நோக்கி பயணம் செய்தார்.
அப்போது, இவர்களின் காரை சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நசியனூர் பகுதியில் மர்ம நபர்கள் வழிமறித்தனர். அப்போது, காரில் இருந்து இறங்கிய ரௌடி ஜானை சுற்றிவளைத்த 5 பேர் கும்பல், சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பிச் சென்றது.
இதையும் படிங்க:
கொலை செய்யப்பட்ட ஜான், வழக்கு ஒன்றில் கைதாகி சமீபத்தில் தான் பிணையில் வந்தார். மேலும், தினமும் கிச்சிபாளையம் காவல் நிலையத்திலும் கையெழுத்திட்டு வந்துள்ளார். இதனிடையே தான் அவரை மர்ம கும்பல் கொலை செய்தது.
இதையும் படிங்க: