கோவை மாவட்டம் நாச்சிபாளையம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் நாச்சிப்பாளை
யம் அருகே காட்டு பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த எரிந்த பெண் சடலம் அரசு பள்ளி ஆசிரியர் பத்மா என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் செட்டிபாளையம் போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.