தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் இன்று அரசு, தனியார் உள்பட அனைத்துக் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று மார்ச்.22ம் தேதி வெள்ளிக்கிழமை அட்டவணை அடிப்படையில் இயங்கும். திருத்திய கால அட்டவணைப்படி இன்று பள்ளிகள் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர், தனியார் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.