அடிக்கும் வெயிலுக்கு முலாம்பழம் வாங்க போறீங்களா? அப்போ இந்த 6 விஷயத்தை செக் பண்ணுங்க
Newstm Tamil April 20, 2025 10:48 AM

நிறைய சமயங்களில் முலாம்பழம் வாங்கும்போது நாம் வீட்டுக்கு வந்த பிறகு தான் தெரியும் அது இனிப்பாக இல்லை. சப்பென்று சுவையே இல்லாமல் இருக்கிறது என்று.

சரி அப்போ இனிப்பான முலாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும். வாங்க தெரிஞ்சிக்கலாம்.

பழுத்த தர்பூசணியைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த வழி, அதன் அடிப்பகுதியைச் சரிபார்ப்பதாகும். இயற்கையாகவே பழுத்த முலாம்பழம் அடர் நிற அடித்தளத்தைக் கொண்டுள்ளது.

அடிப்பகுதி வெளிர் நிறத்தில் இருந்தால், தர்பூசணி முழுமையாக பழுத்திருக்கவில்லை, போதுமான இனிப்பு இல்லை என்பதற்கான அறிகுறியாகும்.

முலாம் பழத்தைத் தேர்வு செய்யும்போது அதன் எடையை கவனித்து வாங்க வேண்டியது முக்கியம். கொஞ்சம் காயாக இருக்கும் முலாம்பழத்தை விட நன்கு பழுத்த பழம் சற்று எடை குறைவாகவும் லேசானதாகவும் இருக்கும். அதேபோல விதைகளும் அவற்றில் குறைவாக இருக்கும்.

விதைகள் அதிகமுள்ள பழங்கள் இனிப்பாக இருக்காது. விதைகள் குறைவாக உள்ள பழங்கள் தான் அதிக இனிப்புடன் இருக்கும். அதேபோல தோல் மிக மெலிதாக இருக்கும் பழத்தையும் தேர்வு செய்யாதீர்கள். அது அதிகமாக பழுத்ததாகவும் (கெட்டுப் போகும் நிலையில்) ஃபிரஷ்ஷாக இல்லாமலும் இருக்கும்.

முலாம்பழம் வாங்கும்போது நாம் எதையுமே கவனிக்க மாட்டோம். பழத்தை எடுத்து எடையைப் போட்டு பணத்தைக் கொடுத்து விட்டு வாங்கி வந்து விடுவோம். ஆனால் இனிமேல் அப்படி செய்யாதீங்க.

முலாம்பழத்தை வாங்கும்போது முதலில் அதன் நிறத்தை கவனிங்க. நன்கு பழுத்த முலாம்பழத்தின் தோல் நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதன்மீது லேசான பச்சை நிறக் கோடுகளும் இருக்கும்.

முற்றிலும் பச்சையான நிறத்தில் தோல் இருக்கும் முலுாம்பழத்தை வாங்காதீர்கள். அது முழுமையாக பழுக்காமல் காயாகவும் இனிப்பு இல்லாமலும் இருக்கும். அதேபோல அவற்றில் விதைகளும் அதிகமாக இருக்கும்.

முலாம்பழம் வேகமாக கெடாமல் இருக்க வழிகள்

கடையில் இருந்து வாங்கி வந்தவுடனேயே வெட்டினால் ஓகே! உடனே சாப்பிட விரும்பவில்லை என்றால் அதை ஃபிரிட்ஜிலோ இருட்டான இடங்களிலோ வைக்கக் கூடாது. அறை வெப்பநிலையில் வைத்து விடுங்கள்.

ஒருவேளை நீங்கள் பழத்தை வெட்டி பாதி சாப்பிட்டு விட்டீர்கள். மீதி பாதி இருக்கிறது என்றால் அதை தோல் சீவிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காற்று புகாத பாட்டிலில் போட்டு வைத்து விடுங்கள். கெட்டுப் போகாமல் இருக்கும். இது நீண்ட நேரம் ஃபிரஷ்ஷாகவே இருக்க வேண்டுமென்றால் ஃபிரிட்ஜில் வைக்கலாம்.

மற்ற பழங்கள் வைத்திருக்கும் பேஸ்கட்டிலோ கவரிலோ முலாம் பழத்தையும் சேர்த்து வைக்கக்கூடாது. இதன் நறுமணம் மற்ற காய்கறி மற்றும் பழங்களுக்கும் பரவிவிடும். அதனால் இந்த பழத்தின் சுவையும் மணமும் குறைந்துவிடும்.

பழத்தை நறுக்கி விட்டு அதன் விதைகளைத் தூக்கி வீசாமல் அதை கழுவி சுத்தம் செய்து வெயிலில் உலர்த்தி ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சாலட், ஸ்மூத்தி போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம். கடைகளில் மெலன் சீட்ஸ் என்று அதிக விலைக்கு விற்கிறார்கள்.

காயாக இருக்கும் முலாம்பழத்தை வீட்டில் பழுக்க வைப்பது எப்படி?

ஒன்றுக்கு மேற்பட்ட பழங்கள் வாங்கும்போது நாம் பொதுவாக ஒன்று மட்டும் பழமாக வாங்கிக் கொண்டு மற்றவற்றைக் கொஞ்சம் காயாகவே வாங்குவோம். அது சில சமயங்களில் நன்கு பழுக்கும். சில சமயம் காய் வெம்பிப் போய்விடும். அதை தவிர்க்க வீட்டிலேயே எப்படி பழுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வாங்கி வந்த காயாக இருக்கும் முலாம்பழத்தை நியூஸ் பேப்பரில் நன்கு முழுவதுமாக சுற்றி வையுங்கள்.

லேசாக காற்று உள்ளே செல்லும்படி பேப்பரில் சிறு துளை மட்டும் போட்டு வையுங்கள்.

வீட்டில் இருட்டும் வெதுவெதுப்பாகவும் உள்ள இடத்தில் வைத்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் விட்டுவிடுங்கள். பழுத்து சாப்பிட தயாராகிவிடும்.

முலாம்பழத்தை வேகமாகப் பழுக்க வைக்க மற்றொரு எளிய வழியும் இருக்கிறது. பழுக்க வைக்கும் கவருக்குள் இயற்கையாகவே எத்திலீன் வாயுவை வெளியிடும் பழங்களில் ஏதேனும் ஒன்றை இதோடு சேர்த்து வைக்கலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.