அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!
Dhinasari Tamil May 12, 2025 08:48 PM

#featured_image %name%

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் இடைநிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு இருந்ததாகவும், அதிபர் டிரம்ப் எப்படி முதலில் முடிவை அறிவிக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் சமாதானத்திற்கு, இந்தியா ஏன் ஒப்புக் கொண்டது என்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. ANI-க்கு அமெரிக்க வெளியுறவு துறை வழங்கிய கருத்துகளை வார்த்தை வார்த்தையாக வாசித்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது — இந்த சமாதானத்தில் அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டுகளுக்கு மட்டுமே.!

“மோடி, ஷெரீஃப் ஆகிய இரு பிரதமர்களின் ஞானம், அறிவு, மற்றும் அரசியல் முதிர்ச்சியை நாங்கள் பாராட்டுகிறோம். அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்தது அவர்களின் திறமையின் சான்று. அதிபர் ட்ரம்பும், வெளியுறவுத் துறை செயலாளர் ரூபியோவும், இரு நாடுகளும் முழுமையான சமாதான ஒப்பந்தத்தை நிலைநிறுத்தி நேரடி உரையாடல்களில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மோதல்களை தவிர்க்க, பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்கா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும்.” -என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் “பாராட்டுகிறோம்”, “ஆதரிக்கின்றோம்”, “வலியுறுத்துகின்றோம்” “உறுதியளிக்கின்றோம்” என்ற சொற்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மத்தியஸ்தம், தலையீடு அல்லது உறுதி செய்தோம் போன்ற சொல்லாடல்கள் காணப்படவில்லை.

இது இந்தியாவின் நீண்டநாள் வெளிநடப்பு கொள்கையை மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது — “எந்தத் தீர்வும், மூன்றாம் தரப்பின் தலையீடு இல்லாமல், நேரடியாகவே தீர்க்கப்படும்” என்பது இந்தியாவின் வெளியுறவுத் துறையின் நிலைப்பாடு.

இந்த சமாதான வெற்றி, வெளிநாட்டுத் தூதுவர்களால் அல்ல… மோடியின் நேரடி உறுதி மற்றும் இந்தியாவின் உறுதியான கொள்கை என்பதால்தான் சாத்தியமானது.

  • செய்திக்கதிர் குழுவில் ஜி.எஸ். பாலமுருகன்

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.