#featured_image %name%
||श्री:||
ஸ்ரீ ராமஜெயம்
பஞ்சாங்கம் | 23.4.2025 | புதன்கிழமை
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
சித்திரை ~ 10 { 23.4.2025 } புதன் கிழமை**
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாதம் { மேஷ மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 12.13 pm வரை தசமி பின் ஏகாதசி
நாள் ~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ 7 51 am வரை அவிட்டம் பின் சதயம்
யோகம் ~ சுப்ரபம்
கரணம் ~ பத்ரம்
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம்…சுபயோகம்
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை
10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00to 10.30am and 2.00to3.00pm
சூரியஉதயம் ~ காலை 6.01
சந்திராஷ்டமம் ~ கடகம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்
ஸ்ராத்ததிதி ~ ஏகாதசி
இன்று ~ வாஸ்து நாள் time 8 .54 am to9.30 am
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஹோரை புதன்கிழமை
காலை
6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்
பிற்பகல்
12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்
மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய (23-4-2025) ராசிபலன்கள்
மேஷம்மேஷ ராசிக்கான பலன்கள் ..!
மனதில் நினைத்த காரியம் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவதற்கான சூழல் உண்டாகும். வெளிவட்டாரத்தில் கௌரவம் உயரும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : காரியம் கைகூடும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : கௌரவம் உயரும்.
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். தோற்றப்பொலிவு மேம்படும். பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு விரிவடையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்
கிருத்திகை : சிந்தனைகள் உண்டாகும்.
ரோகிணி : ஆதாயகரமான நாள்.
மிருகசீரிஷம் : நெருக்கம் மேம்படும்.
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
மனதளவில் புதிய தெளிவு உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். பணி இடத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சேமிப்புகளின் மூலம் ஆதாயமான சூழல் அமையும். வியாபாரத்தில் திடீர் திருப்பம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : தெளிவு உண்டாகும்.
திருவாதிரை : ஆதரவான நாள்.
புனர்பூசம் : திருப்பம் ஏற்படும்.
கடக ராசிக்கான பலன்கள் ..!
வாழ்க்கைத்துணையால் வீண்செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சமயங்களை அறிவீர்கள். பொழுதுபோக்கு செயல்களில் கவனம் வேண்டும். நண்பர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையாக இருக்கவும். சமூகம் சார்ந்த பணிகளில் மதிப்பு உயரும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
புனர்பூசம் : செலவுகள் ஏற்படும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : மதிப்பு உயரும்.
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உயர் அதிகாரிகளின் இடத்தில் மதிப்பு உயரும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
மகம் : உற்சாகமான நாள்.
பூரம் : தாமதங்கள் விலகும்.
உத்திரம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
வியாபாரம் ரீதியான நெருக்கடிகள் குறையும். உடன் இருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். மறைமுகமான திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் எண்ணம் அறிந்து செயல்படுவார்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை நிறம்
உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.
அஸ்தம் : ஆரோக்கியம் சீராகும்.
சித்திரை : தெளிவு பிறக்கும்.
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் ஏற்படும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கலைத்துறையில் செல்வாக்கு மேம்படும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பீர்கள். சமூகம் சார்ந்த பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : செல்வாக்கு மேம்படும்.
விசாகம் : மாற்றமான நாள்.
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் பிறக்கும். கல்விப் பணிகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கால்நடை விஷயங்களால் ஆதாயம் உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : சிந்தனைகள் பிறக்கும்.
கேட்டை : ஆதாயம் உண்டாகும்.
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : நட்பு கிடைக்கும்.
பூராடம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
மகர ராசிக்கான பலன்கள் ..!
நண்பர்களுக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். தோற்றப்பொலிவு மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். மனதில் நேர்மறையான சிந்தனைகள் பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திராடம் : பொலிவு மேம்படும்.
திருவோணம் : சிந்தனைகள் பிறக்கும்.
அவிட்டம் : மதிப்பு உயரும்.
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். சாலைப் பயணங்களில் கவனம் வேண்டும். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். வியாபாரம் தொடர்பான செயல்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : சிந்தித்து செயல்படவும்.
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
மீன ராசிக்கான பலன்கள் ..!
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். ஆடம்பரம் சார்ந்த செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மறைமுகமான தடைகள் படிப்படியாக குறையும். வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : பொறுமை வேண்டும்.
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்
மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்
ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.
தினசரி. காம்
தினம் ஒரு திருமுறைமறை – 1. பதிகம் – 44 பாடல் – 7
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.
விளக்கவுரை :
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
News First Appeared in