பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய நபரின் வீடு வெடிகுண்டு வைத்து தகர்ப்பு!
Top Tamil News April 25, 2025 03:48 PM

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையதாக கூறப்படும் நபரின் வீடு வெடிகுண்டு வைத்து தகர்ப்பட்டது. 

கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய நபரின் வீடு வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. காஷ்மீரின் டிரால் பகுதியில் பயங்கரவாதி ஆஷிஃப் ஷேக்கின் வீடு வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பந்திப்போராவின் கோல்னார் அஜாஸ் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் காவல்துறை இணைந்து கூட்டுத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. தீவிரவாதிகளில் இருப்பிடம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அங்கு துப்பாக்கிச்சண்டை நடந்ததாக ராணுவத்தின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.