அஸ்வத் மாரிமுத்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் அஸ்வத் மாரிமுத்து.
ஓ மை கடவுளை திரைப்படம் வித்தியாசமான கதைகளத்தை கொண்டிருந்ததால் முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அஸ்வத் மாரிமுத்து. அதை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஓரி தேவுடா என்ற பெயரில் தெலுங்கில் அப்படத்தை ரீமேக் செய்தார்.
தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் என்ற திரைப்படத்தை இயக்கி அது திரையரங்குகளில் வெளியாகி மிகவும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. யாரும் எதிர்பாராத விதமாக லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டிராகன் திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கிறது என்று அனைவரும் விமர்சனம் கூறி இருக்கிறார்கள்.
இந்நிலையில் அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக சிம்புவை வைத்து STR 51 படத்தை இயக்கி வருகிறார். இது பற்றி ஒரு நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், STR 51 பாடத்தில் நீங்கள் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இருக்கும். காதல், காமெடி, ரொமான்ஸ், ஆக்சன், எல்லாமே இந்த படத்தில் இருக்கும். சிம்பு அருமையாக நடிக்க கூடியவர். அவரை வைத்து என்ன வேணாலும் நாம் செய்யலாம். கண்டிப்பாக இது ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்று பகிர்ந்திருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.