கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூரில் 5140 செல்போன்கள் திருடப்பட்டதாக போலீசாருக்கு புகார் வந்தது. அந்த செல்போன்களின் மொத்த மதிப்பு சுமார் மூன்று கோடி ஆகும். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவிலிருந்து பெங்களூருக்கு ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்த போது பலகோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஏழு பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது.
பின்பு அவர்களை கைது செய்த போலீசார் ஒவ்வொருத்தரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து 300 முதல் 400 மொபைல் போன்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதனால் போலீசார் அவர்களிடமிருந்த மொபைல் போன்களையும், கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.