பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்,ராவல் பிண்டியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்பது தெரிய வந்ததாக ஒரு ஆவணம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது சிறையில் வைத்து இம்ரான் கானை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி ஒரு ஆவணம் வைரலாகி வரும் நிலையில் அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இந்த நிலையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அவருடைய ஆணுறுப்பில் காயம் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.