பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் சிறுமியை மிரட்டி… எவ்வளவு துணிச்சல்…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!
SeithiSolai Tamil May 07, 2025 03:48 AM

டெல்லியின் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பெயர் பெற்ற பழைய ராஜேந்திர நகர் பகுதியில் ஒரு சிறுமி பட்டப்பகலில் துப்பாக்கியால் மிரட்டப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த சிசிடிவி காணொளி தற்போது பலரிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஒருவர் துப்பாக்கியைக் கையில் வைத்துக்கொண்டு சிறுமியை மிரட்டுகிறார். சிறுமி அந்த அச்சத்தினால் சத்தம் போடாமல் இருக்கும் நிலையில், குற்றவாளி அவளிடம் பணத்தை கேட்கிறார். சிறுமி பணப்பையிலிருந்து பணத்தை எடுத்து தர, அவற்றை வாங்கிய வில்லன் பின்னர் சிறுமியின் பணப்பையையும் பறித்துவிட்டு ஓடுகிறார். இந்த சம்பவம் அனைத்தும் சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் பழைய ராஜேந்திர நகர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வசித்து வருவதால், இந்த சம்பவம் அவர்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. இது போன்ற சம்பவங்களை தடுக்க போலீசாரின் நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

இந்த காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். குற்றவாளியின் முகம் மற்றும் உடை உள்ளிட்ட விவரங்கள் வீடியோவில் தெளிவாக உள்ளதால், அவரை விரைவில் அடையாளம் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.