FLASH: பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்….! வீர மரணமடைந்த முரளி நாயக்கின் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்வர் இரங்கல்….!!
SeithiSolai Tamil May 09, 2025 09:48 PM

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இருப்பினும் இந்தியா வலுவான S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் முயற்சிகளை தகர்த்து எறிந்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து நேற்று இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதை இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தகர்த்தெறிந்தது.

எல்லையில் பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம் அடைந்துள்ளார். வீர மரணம் அடைந்த முரளி நாயக் ஆந்திராவின் சத்திய சாய் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்த நிலையில் நாட்டுக்காக தனது உயிரை விட்ட முரளி நாயக்கின் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

The post appeared first on .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.