கோர விபத்து... அரசுப்பேருந்து மோதி சாலையை கடந்த 18 மாடுகள் துடிதுடித்து பலி... 20 மாடுகள் படுகாயம்!
Dinamaalai May 16, 2025 03:48 AM

புளியமர நிழலில் அமைந்திருந்த சாலைகள் முழுவதும் தற்போது நான்கு வழி ஆறுவழி,எட்டுவழி சாலையாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் மனிதர்கள் மட்டுமின்றி ஆடு மாடுகளும் சாலையை கடக்க திணறி வருகின்றன. பல நேரங்களில் அசம்பாவிதங்களும், ஆபத்துக்களும் ஏற்பட்டு விடுவதுண்டு. அந்த வகையில் தேனி மாவட்டத்திலுள்ள டி. கள்ளிப்பட்டி திண்டுக்கல் பைபாஸ் சாலையை மாடுகள் கடந்து கொண்டிருந்தன.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பேருந்து மாடுகள் மீது மோதியது. அரசு பேருந்து மோதிய விபத்தில் 18 மாடுகள் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தன. இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் காயம் அடைந்துள்ளது.


தேவாரம் பகுதியைச் சேர்ந்த சுருளிச்சாமி என்பவர் 100-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவமைத்து மேய்த்து வருகிறார். இவரது மாடுகள் மீதுதான் அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்  அரசு பேருந்து ஓட்டுநர் அழகர்சாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.