வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
அருணாச்சல பிரதேசம், திபங் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று 12 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் குறித்து பாதிப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை எனினும் குடியிருப்பு பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.