“பசுமாட்டை துரத்திய தெரு நாய்கள்”… மர படிக்கட்டில் ஏறி 3-வது மாடிக்கு சென்றதால் பரபரப்பு… நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..!!
SeithiSolai Tamil May 18, 2025 12:48 AM

மராட்டிய மாநிலம், புனே, பர்தேஷிவாடா பகுதியில் உள்ள தெருவில் பசு மாடு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை தெரு நாய்கள் சில துரத்தியதால் பயந்து போன பசு அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் மர படிக்கட்டின் மூலம் ஏறி 3 வது மாடிக்கு சென்று விட்டது. இதனை பார்த்த அந்தப் பகுதி மக்கள் 3 வது மடியில் இருந்த பசுமாட்டை கீழே இறக்க முயற்சி செய்தனர்.

ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பசுவை மீட்பதற்காக பல முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் பாதுகாப்பு பெல்ட்களைப் பயன்படுத்தி கிரேன் மூலம் பசுவை மாடியில் இருந்து கீழே இறக்கினர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.