செல்போனில் பேசுவதைக் கண்டித்ததால் மாடியில் இருந்து குதித்த மாணவி!
Dinamaalai May 18, 2025 04:48 PM

செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் வீட்டின் மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே குதித்த  சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே முழுக்கோடு பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் தற்போது 11ம் வகுப்பு முடித்து 12ம் வகுப்பிற்குச் செல்ல உள்ளார். மாணவி எப்போதும் நண்பர்களுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசி கொண்டிருப்பது வழக்கம். இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆனாலும், செல்போனில் நண்பர்களுடன் பேசுவதை மாணவி நிறுத்தவில்லை.

இந்நிலையில் மாணவி வீட்டில் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி திடீரென வீட்டின் மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.

இதில் அவர் படுகாயமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மகளை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.