திமுகவின் 3 மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகவலால் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 2026ல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக ஏற்கனவே திமுகவில் 7 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 8வது பொறுப்பாளராக தற்போது எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் கிழக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கு இவர் பொறுப்பாளராக செயல்படுவார் என திமுக தலைமை அறிவித்துள்ளது.