யூடியூபில் மூலம் பிரபலமான, ‘Travel With Jo’ என்ற பயண வலைதளத்தை இயக்கி வந்த ஹரியானாவைச் சேர்ந்த ஜோதிகா மல்ஹோத்ரா (33), இவர் பாகிஸ்தானுக்காக உளவுத்தொழில் செய்ததற்காக ஹிஸார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2023-இல் பாகிஸ்தான் உயர் தூதரக அதிகாரி ஏஹ்சான்-உர்-ரஹீம் என்ற நபருடன் தொடர்பு கொண்ட ஜோதி, பாகிஸ்தானுக்குச் சென்று ISI அதிகாரிகளை சந்தித்து, இந்திய ராணுவ இயக்கங்கள், முகாம்கள் பற்றிய முக்கிய தகவல்களை பகிர்ந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் பாகிஸ்தானில் ஷாகிர் மற்றும் ராணா ஷஹ்பாஸ் ஆகிய உளவுத்துறையினரை நேரில் சந்தித்ததாகவும், அவர்கள் எண்களை ‘Jat Randhawa’ என்ற பெயரில் சேமித்து, WhatsApp, Telegram, Snapchat வழியாக தொடர்பு வைத்திருந்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.
இதனால் அவருக்கு எதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒருங்கிணைப்பு, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதற்காக, ஜோதிகா மல்ஹோத்ரா மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது 5 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஜோதி மல்ஹோத்ரா வெளியிட்ட பழைய பயண வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன.அதில் ஒன்றான கடந்த 2024ம் ஆண்டு சீனாவில் வெளியான ஒரு வீடியோ தற்போது அதிகமான கவனத்தை ஈர்த்துள்ளது. இதில், ஜோதி மல்ஹோத்ரா புல்லட் ரயிலில் மற்றொரு பயணியின் சாளர இருக்கையை மாற்ற வற்புறுத்துவது.
மேலும் அறிமுகமற்ற நபரின் ஸ்கூட்டரில் ஏறி பயணம் செய்வது, மற்றொரு பெண்ணின் மிதிவண்டியை பிடித்து கொண்டு போவது, பஸ்களில் கட்டணம் செலுத்தாமல் பயணித்து, “சீனாவில் யாரும் ஆங்கிலம் பேசவில்லை” என புகார் கூறுவது போன்ற மரியாதையற்ற, சிரமத்தை ஏற்படுத்தும் செயல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பலரும் இந்தியாவின் மதிப்பை வெளிநாட்டில் கெடுக்கும் செயல் என விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு பயனர், “இவர் வெறும் யூடியூபர் என நினைத்தோம். இப்போது தெரிகிறது இவர் நம் நாட்டுக்கு துரோக செய்யும் செயலில் ஈடுபட்டவர்” என கூறியுள்ளார்.