தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தனது திறமையால் கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் சூரி. ‘விடுதலை’ பாகம் 1 மற்றும் 2 ஆகிய அரசியல் பின்னணி கொண்ட படங்களில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்து, சினிமா ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றார். ஆனால், ‘கருடன்’ திரைப்படம் அவருக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இந்த கமர்ஷியல் வெற்றிப்படம் சூரியை ஒரு முழுமையான கதாநாயகனாகவும், கமர்ஷியல் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் உறுதிப்படுத்தியது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘மாமன்’ திரைப்படம் சிவகார்த்திகேயனின் பாணியில் குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டு, சூரியின் அழுத்தமான நடிப்பால் மக்களின் மனதை வென்றுள்ளது. தாய்மாமன்-அக்கா-தம்பி உறவுகளை உணர்வுபூர்வமாக சித்தரித்த இப்படம், குடும்பங்களை திரையரங்குகளுக்கு ஈர்த்து, சூரியின் நடிப்பு ஆற்றலை மேலும் பறைசாற்றியது.
இந்நிலையில் ‘மாமன்’ திரைப்படத்தை , பார்த்த ஒரு சிறுமி தனது தாய்மாமனை நினைத்து அழுதார். இதனைக் கேள்விப்பட்ட சூரி, அந்த சிறுமியுடன் வீடியோ அழைப்பில் பேசி, “ஏன் அழுகிறாய்? உங்களுக்காகத் தான் இப்படி எல்லாம் படம் எடுக்கிறோம், நல்லா பாருங்க,” என்று உருக்கமாகக் கூறினார். இந்த உரையாடல் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
View this post on Instagram