தான் எழுதிய பாடலை பாட மறுத்த டிஎம்எஸ்… கண்ணதாசன் என்ன செய்தார் தெரியுமா?
Tamil Minutes May 30, 2025 05:48 AM
tms, kannadasan

கவிஞர்கள் எப்போதுமே தனது வரிகளை யாராவது மாற்றச் சொன்னால் மாற்ற மாட்டார்கள். அவ்வளவு எளிதில் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஒரு பாடகருக்காக தனது வரிகளை மாற்றிக் கொடுத்தார் கவியரசர் கண்ணதாசன். அப்படி என்னதான் பாடல்னு பார்க்கலாமா…

கண்ணதாசன் எழுதிய கடவுள் பாடல்… பாட மறுத்த டிஎம்எஸ்… 1963ல் கண்ணதாசன் தயாரிப்பில் வெளியான படம் வானம்பாடி. இந்தப் படத்தில் எஸ்எஸ்.ஆர், தேவிகா, முத்துராமன், டி.ஆர்.ராஜகுமாரி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படததின் இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன்.

இந்தப் படத்தில் கடவுள்; குறித்து காதல், மனிதனுடன் ஒப்பிட்டு கண்ணதாசன் ஒரு பாடலை எழுதியுள்ளார். அந்தப் பாடலைப் படித்துப் பார்த்த டிஎம்எஸ். அதைப் பாடத் தயங்கியபடி இருந்தார். நீண்ட நேரமாக யோசித்துக் கொண்டே இருந்தார். இதைக் கவனித்த கண்ணதாசன் என்னாச்சுன்னு கேட்டுள்ளார். அதற்கு கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்று எழுதி இருப்பது சரி.

ஆனால் அதற்கு அடுத்த வரியில் அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும் என்று எழுதி இருக்கிறீர்கள். கடவுள் எப்படி சாக முடியும். மனிதன் தான் சாக முடியும் என்று கேட்டுள்ளார். உடனே கண்ணதாசன் பேனாவை எடுத்து வரியை மாற்றிக் கொடுத்துள்ளார். அதன்பிறகு தான் டிஎம்எஸ். அந்தப் பாடலைப் பாடவே ஆரம்பிச்சாராம். அது என்ன வரி தெரியுமா?

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும். அவன் காதலித்து வேதனையில் வாட ணே;டும் என்பதுதான். இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இன்று வரை இந்தப் பாடல் சூப்பர்ஹிட் தான்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.