“கூலாங்கற்களை கொண்டு செல்வதை நிறுத்துங்கள்”… அவை வெறும் கற்கள் அல்ல வரலாற்று சிறப்புமிக்கவைகள்… சுற்றுலா பயணிகளிடம் கோரிக்கை..!!!
SeithiSolai Tamil May 31, 2025 02:48 AM

பெல்ஜியத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ப்ரூக்ஸ் நகரம், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகக் கருதப்படுகிறது. சமீப காலமாக இடைக்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள், தெருக்களால் உலகளவில் புகழ் பெற்றுள்ளது. இந்த நகரம் தற்போது ஒரு வித்தியாசமான பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.

அந்த பிரச்சனைதான், கல்லூரி நேரத்தில் எழுதி வைத்த நோட்டுகளை நினைவுப் பொருளாக எடுத்துச் செல்லும் மாணவர்களைப்போல், இங்குச் சுற்றுலா பயணிகள் அந்த வரலாற்று கற்களையே நினைவுப் பொருளாக எடுத்து செல்கின்றனர்.

இது குறித்து ப்ரூக்ஸின் நகர கவுன்சிலர் ஃபிராங்கி டெமன் தெரிவித்ததாவது, “ஒவ்வொரு மாதமும் சுமார் 50 முதல் 70 வரையிலான கூழாங்கற்கள் நகரத்திலிருந்து காணாமல் போகின்றன. ஒருவருக்கு இது சாதாரண விஷயமாகத் தெரிந்தாலும், அந்த ஒரு சதுர மீட்டர் கற்களுக்குப் பழுதுபார்ப்பு செலவாக ரூ.17,000க்கும் மேல் செலவாகிறது” என்றார்.

இதனால், நகரத்தின் சின்னமான இடங்களான மின்னேவாட்டர், கிராண்ட் பிளேஸ், விஸ்மார்க், க்ரூதுஸ் அருங்காட்சியகங்களில் கற்கள் காணாமல் போனது தெளிவாக தெரிகின்றது.

அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளிடம் சீரிய வேண்டுகோள் விடுத்துள்ளனர் – “நீங்கள் நடக்கிற இடம் சும்மா கல் பதித்த தெரு இல்லை… நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த வரலாற்றை காலால் மிதித்து கடக்கிறீர்கள். தயவுசெய்து அந்தக் கற்களை அவை இருந்த இடத்தில் விட்டுவிடுங்கள்!” ப்ரூக்ஸ் நகரம் சுற்றுலா மக்களால் நிறைந்தாலும், அந்த வரலாற்று சுவடுகள் அழியாமல் பாதுகாக்கப்படவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.