வெளிநாடு போறீங்களா? இதைப் படிச்சுட்டு போங்க. இப்படியும் பல நாடுகளில் நடக்குது. சுற்றுலா சென்ற இடத்தில், மரணமடைந்ததாக கூறப்பட்ட இளம்பெண்ணின் இதயம் பிரேத பரிசோதனையில் காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் வசித்து வரும் பெத் மார்ட்டின் எனும் 28 வயதான இளம்பெண், தனது கணவர் லுக் மார்ட்டின், அவர்களது 2 குழந்தைகள் என கடந்த ஏப்ரல் 27ம் தேதி குடும்பத்தோடு துருக்கி நாட்டிற்கு சுற்றுலா சென்று இருந்தனர். இவர்கள் அங்கு தரையிறங்கிய சில மணி நேரத்திலேயே பெத் மார்ட்டினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு முதலில் அந்த நாட்டின் உணவு ஒத்துக் கொள்ளவில்லை என நினைத்தார்.
உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது மரணத்திற்கு உடல் உறுப்புகள் செயலிழந்ததால் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே அந்த பெண் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவரது உடலை இங்கிலாந்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்த போது இங்கிலாந்து மருத்துவர்கள் அதற்கு முன்பு பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அந்தப் பெண்ணின் உடலில் இதயம் இல்லாதது தெரிய வந்தது. அதனை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மருத்துவர்கள் உறவினர்களிடம் தெரிவித்த நிலையில் பெத் மார்ட்டின் மரணத்தில் துருக்கி மருத்துவர்கள் உண்மையை மறைப்பதாக குற்றம் சாட்டினர். ஆனால் இதனை அதிகாரிகள் மறுத்த நிலையில் அவருக்கு எந்தவிதமான அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை எனக் கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.