பகீர் சிசிடிவி காட்சிகள்... மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்... தப்பிச்சென்ற கார் ஓட்டுனர்!
Dinamaalai May 31, 2025 04:48 AM

 

மகாராஷ்டிரா மாநிலத்தில்  சத்திரபதி சம்பாஜிநகர் பகுதியில் கோர விபத்து ஏற்பட்டு பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில்  ஒரு உயர்வேக லைட் ப்ளூ கலர்  ஹூண்டாய் கார், ரோட்டில் உள்ள தடுப்புச் சுவரை மோதிய பிறகு, எதிரே வந்த மோட்டார் சைக்கிளை நேராக மோதியது. அந்த பைக்கிள்  வந்த இளைஞர் காற்றில் தூக்கி எரியப்பட்டார்.  அதே சமயம் அங்கே நடந்து சென்றுகொண்டிருந்த  3 பெண்கள்  அந்த பைக் அவர்களை  பாய்ந்து வந்த போதும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.


இந்த விபத்துக்குப் பிறகு அந்த கார் அருகிலிருந்த மின்கம்பத்தையும் மோதியது. அங்கிருந்து தீப்பொறிகள் வெளியானதன்  காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. படுகாயமடைந்த இளைஞரை அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து மீட்டனர். அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.  


கார் ஓட்டுநர் ஒரு கணம் காரை நிறுத்தி  உடனே வண்டியுடன் தப்பிச் சென்றார். தற்போது அந்த காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து பதிவான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில்  போலீசார் விபத்தை ஏற்படுத்திய  வாகனத்தின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.