சீனா மற்றும் கனடா, மெக்சிகோ நாடுகளின் மீது அதிகபட்ச இறக்குமதி வரிவிதிப்பு செய்ததுடன், உலகின் அனைத்து நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்தார் அதிபர் ட்ரம்ப். இந்த கூடுதல் வரிகளை நிறுவனங்கள் பொதுமக்கள் மீது திணிக்கக் கூடாது என்றும் கோரிக்கை வைத்தார்.
ஆனால் அமேசான் நிறுவனம், வாடிக்கையாளர்களின் ரசீதுகளில், ட்ரம்ப்பின் இறக்குமதி வரி என்று ஒன்றை தனியாகப் போடுவோம் என்று அதிரடியாக அறிவித்தது. இதைப் பார்த்து ஆடித்தான் போய்விட்டார் அதிபர் ட்ரம்ப்.
இந்நிலையில் உலகநாடுகளின் வர்த்தகத்திற்கான அமெரிக்க நீதிமன்றம், இப்படி ஏடாகூடமாக வரி விதிக்க அதிபர் ட்ரம்ப்க்கு அதிகாரம் இல்லை என்று தடை போட்டுள்ளது. ட்ரம்ப்பின் வரிவிதிப்பு சட்டத்திற்கு புறம்பானது என்றும் அறிவித்துள்ளது.
உலக நாடுகளுடன் பேரம் பேசி ஒரு புதிய வரி ஒப்பந்தம் போட முயற்சி செய்து கொண்டிருந்த வேளையில் நீதிமன்றத்தின் உத்தரவு அதிபர் ட்ரம்ப் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.