அதிர்ச்சி வீடியோ... பொழைப்பு தேடி வந்த என் கணவரை கொன்னுட்டாங்க…. ஆணவக்கொலையால் வாழ்க்கையே போச்சு... கதறிய பெண்!
Dinamaalai May 30, 2025 11:48 PM

 


 பிரபல தனியார் தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி  பல்வேறு சமூகப் பிரச்சினைகளை விவாதிக்கும் தளமாக விளங்கி வருகிறது. அந்த வகையில், ஆணவக் கொலை குறித்து நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஒரு பெண்ணின் உருக்கமான பேச்சு அரங்கத்தில் கனத்த  மௌனத்தில் ஆழ்த்தியது.


அதில் அந்த பெண் தனது கணவர், சாதி வேறுபாட்டை மீறி தன்னை திருமணம் செய்ய விரும்பியதாகவும், அவரது குடும்பத்தினர் “ஒன்று சேர்ந்தால் கொல்லப்படுவீர்கள்” என எச்சரிக்கை விடுத்தனர்.  ஆனால், என் கணவர் அந்த பெண் “இல்லையென்றால் இறந்துவிடுவேன்” எனக் கூறி தைரியமாக திருமணம் செய்து கொண்டு சென்னையில் வாழ்தோம்.  பொருளாதார நெருக்கடி காரணமாக சொந்த ஊர் திரும்பிவிட்டோம்.  
“ஒரு நாள் உயிருடன் வாழ்ந்தாலும் வாழ்வோம், இல்லையெனில் மரணத்தை ஏற்போம்” என்று திரும்பிய அவர்களுக்கு, துரதிர்ஷ்டவசமாக, மே 25 அன்று அவரது கணவர் கொல்லப்பட்டார். இந்த பேச்சு, தொகுப்பாளர் கோபிநாத்தையும், அரங்கில் இருந்தவர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
“நான் இரண்டு வேளை சாப்பிட்டால், அவர் பட்டினி கிடப்பார்,” சாப்பாட்டுக்கு கூட  வழி இல்லாமல் சொந்த ஊர் நாடி வந்த எங்களுக்கு நேர்ந்த கொடூரம் எனக் கூறியபோது, அரங்கம் முழுவதும் மௌனம் நிலவியது. சொந்த ஊருக்கு திரும்பிய பிறகு, அவரது கணவர் வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பவே இல்லை. “அவரை கொன்றுவிட்டார்கள்,” என அந்தப் பெண் அழுதுகொண்டே  பேசினார்.  இந்நிகழ்ச்சியில் அவர் தனது துயரத்துடன்  கம்யூனிஸ்ட் கட்சியினரும், மாதர் சங்கமும் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும், அவர்களே இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்ததாகவும் கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.