சமீபத்தில் நடிகர் ராஜேஷ் மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். இது தமிழ்த்திரையுலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் ஆசிரியராக 7 ஆண்டுகள் பணிபுரிந்து ஆர்வம் காரணமாக சினிமாவிற்குள் நுழைந்தார். பழகுவதற்கு இனியவர். தமிழை நன்கு உச்சரிப்பார். நடிப்பில் யதார்த்தம் காட்டி அனைவரையும் அசர வைப்பார். பாக்கியராஜின் கதையில் வெளியான கன்னிப்பருவத்திலே படத்தில் தான் ராஜேஷ் அறிமுகம் ஆனார்.
அந்த வகையில் அவருடன் நல்ல நட்பு கொண்டு இருந்தார். ராஜேஷிடம் தனக்குப் பிடித்த பல குணங்கள் உள்ளன என பாக்கியராஜ் சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசியுள்ளார். அதில் அந்த 7 நாள்கள் படத்தின்போது நடந்த அனுபவங்களையும் பேசியுள்ளார். வாங்க பார்க்கலாம். அனாவசியமா வார்த்தைகளை விடக்கூடாது.
யாரிடமும் எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டாரு. அதுல ரொம்ப கவனமா இருப்பாரு. அந்த 7 நாள்கள் படத்துல நான் தான் முதல்ல டாக்டர் கேரக்டர்ல நடிக்கிறதா இருந்தது. அப்புறம் அந்தப் பாலக்காட்டு மாதவன் கேரக்டரை கிரியேட் பண்ணினதுக்கு அப்புறம் தான் அதுல நான் நடிச்சேன். அதுல காமெடியும் சேர்ந்து வந்தது. நல்ல ஹியூமர் இருந்தது.
அதுல நான் நடிச்சா நல்லாருக்கும்னு எல்லாரும் சொன்னாங்க. அதனால அதுல நான் நடிச்சேன். டாக்டர் கேரக்டருக்கு வேற ஆளைத் தேடினேன். முதல்ல சிவக்குமார் என்னோட சாய்ஸா இருந்தது. அவருக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்தது. இவரே டைரக்டரா இருக்காரு. நமக்கு நடிக்கிறதுக்கு ஸ்கோப் இருக்குமான்னு அவருக்கு சந்தேகம் இருந்தது.
அடுத்த சாய்ஸ்ல தான் எனக்கு ராஜேஷ் கரெக்டா இருப்பாருன்னு தோணுச்சு. அவருக்கு அந்தக் கேரக்டர் செஞ்சதால அவரு லைஃப்புக்கே (ரியல் எஸ்டேட் தொழில்ல) அது பெரிய அளவில் யூஸா இருந்ததுங்கறது சந்தோஷம். அவரு சாப்பாட்டுல இருந்து எல்லா விஷயத்துலயும் முறையா செய்யணும்னு நினைப்பாரு. என்கிறார் பாக்கியராஜ்.