ஒவ்வொரு வருடமும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ள நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்திருந்தது.
இந்த விடுமுறை நாட்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் இன்று முதல் தொடங்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.