புகைக்கும் வயதை உயர்த்த வேண்டும்…. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…!!!
SeithiSolai Tamil June 02, 2025 06:48 PM

தமிழகத்தில் புகைக்கும் வயதை 21 ஆக அதிகரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது சில ஆண்டுகளில் தமிழ்நாட்டை புகை பிடிக்கும் வழக்கம் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும். பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தையே முறையாக செயல்படுத்த அரசு மறுக்கிறது.

கர்நாடகாவில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்த குறைந்தபட்ச வயது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதலால் தமிழகத்தில் புகைக்கும் வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.