பொதுவாக அமிர்தமே ஆனாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது நஞ்சாக மாறி விடும் என்பது போல நன்மை தரும் க்ரீன் டீயை ஒரு நாளைக்கு 5 ,6 கப் குடிக்கும்போது நமக்கு பல பாதிப்புகளை உண்டாக்கும் .அதனால் க்ரீன் டீயை எப்படி குடிக்க வேண்டும் என்று நாம் இப்பதிவில் காணலாம் .
1.
உணவு உன்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பும் ,உணவு உண்ட பின் இரண்டு மணி நேரத்திற்கு பின்பும் இதை குடிக்க வேண்டும் .
2.இன்று உடல் ஆரோக்கியம் என்ற பெயரில் வரும் க்ரீன் டீ விளம்பரத்தை பார்த்து ,பலர் கிரீன் டீக்கு அடிமையாகி உள்ளனர்.
3.கிரீன் டீ ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது உண்மைதான். ஆனால் இந்த நலம் தரும் கிரீன் டீ அளவுக்கு அதிகமாகிப் போக கூடாது ,அப்படி அதிகமாக போனால் , கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக பல விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
4.இந்த டீயை குறைந்த அளவே எடுக்கணும் .அதிக அளவில் அதிக நேரம் எடுத்துக் கொண்டால், அது நம்முடைய கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பல ஆராய்ச்சிக்கு பின் தெரிவித்துள்ளனர்.
5.இந்த கிறீன் டீ புற்றுநோய், இதய நோய், உடல் பருமன், சர்க்கரை நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும் 6.இந்த க்ரீன் டீயால் இந்த நோய்களை குறைக்கலாம் என பல ஆய்வுகள் கூறினாலும், அவர்கள் பரிசோதித்த சிலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனவே இந்த க்ரீன் டீ விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆரய்ச்சியாளர்கள் வற்புறுத்தியுள்ளார்கள்