பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பல்வேறு பகுத்தறிவு பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறோம். பகுத்தறிவின் அடிப்படையில் சமூகத்தை கட்டமைக்க பார்க்கின்றோம். கோவில் திருவிழாவிற்கு அதிகளவில் கூட்டம் செல்வது உண்மையிலேயே நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளமாக என்னால் பார்க்க முடியாது. 'நீ பார்வையாளராக இருக்காதே, பங்கேற்பாளராக இரு' என்ற பழமொழி உண்டு" என்பதை பின்பற்ற வேண்டும்" :- அமைச்சர் மனோ தங்கராஜ்.
கோவிலுக்கு செல்வது அநாகரீகம், ஆனால், சர்ச்சுகளுக்கு செல்வது நாகரீகமா?
இவர் சர்ச்சுகளுக்கு செல்வார், ஆனால் மக்களை கோவிலுக்கு செல்லக்கூடாது என்று சொல்வார். தைரியமிருந்தால் இனி யாரும் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுகளுக்கு செல்லாதீர்கள், வேளாங்கன்னி திருவிழாவுக்கு செல்லாதீர்கள் என்று கூற முடியுமா? குருத்தோலை ஞாயிறு திருவிழாவுக்கு கிருஸ்துவர்கள் செல்ல வேண்டாம் என்று கூற துணிவு உண்டா? ஹிந்து விரோத எண்ணமும், கிருஸ்துவ மதவாதமும் ஒருங்கே கொண்டிருக்கும் இவரை அமைச்சராக்கியது தான் பிரச்சினையே! மனோ தங்கராஜ் ஒரு மதவாதி என்பதற்கு இந்த பேச்சே சாட்சி. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே, மதவாதி யார் என்று இப்போது தெரிந்து விட்டது. அமைச்சர் பதவியை விட்டு விலக்கி பார்வையாளர் யாரையாவது அமைச்சரவையில் பங்கேற்பாளராக்குவீர்களா?" என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல் தமிழக பாஜக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தற்போது கோடிக்கணக்கான இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜுன் திமிர் பேச்சுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் முக ஸ்டாலின்?
தேர்தல் வந்தால் 90% இந்துக்களின் கட்சி என்று நாடகமாடுவதும், இல்லை என்றால் தங்கள் மகன் உதயநிதியை வைத்து சனாதனத்தை ஒழிப்பேன் என உளறுவதும் வாடிக்கையாகி போய்விட்டது. நிச்சயம் 2026 ல் மக்கள் இந்த கேலிக்கூத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பார்கள்" என்று தெரிவித்துள்ளது.