யானை மாமிசத்தை மக்களுக்கு வழங்க ஜிம்பாப்வே அரசு முடிவு!
Seithipunal Tamil June 06, 2025 11:48 PM

ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, சுமார் 50 யானைகளை கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க ஜிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது. 

சமீபகாலமாக ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது,போட்ஸ்வானாவிற்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய யானை எண்ணிக்கையை ஜிம்பாப்வே கொண்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.அங்கு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்  மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது,இதனால மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.சுமார் 800 யானைகள் வசிக்க வேண்டிய இடத்தில் 2,550 யானைகள் வசிப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, சுமார் 50 யானைகளை கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க ஜிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சுமார் 800 யானைகள் வசிக்க வேண்டிய இடத்தில் 2,550 யானைகள் வசிப்பதால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை என ஜிம்பாப்வே அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

மேலும்  யானைகளில் இருந்து வெட்டப்படும் தந்தங்களை அரசு பாதுகாக்கும் எனவும் ஜிம்பாப்வே அரசு தெரிவித்துள்ளது. உணவுக்காக யானைகளை வேட்டையாடும் நடவடிக்கை உலகளவில் கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதிக எண்ணிக்கையில் யானைகள் போட்ஸ்வானா நாட்டில் உள்ளன. ஆப்பிரிக்காவில் உள்ள சவன்னா யானைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானாவில் வாழ்கின்றன என்பன கூடுதல் தகவல். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.