பொதுவாக முடக்கத்தான் கீரை நம் உடலில் உண்டாகும் மூட்டு வலிக்கு சிறந்த மருந்து .மூட்டு வலியுள்ள இடத்தில் இந்த கீரை கொண்டு பத்து போடலாம் ..நம்மை முடக்காமல் இந்த கீரை காப்பதால் இதற்கு முடக்கத்தான் கீரை என்று பெயர் வந்தது .அதனால் நாம் இப்பதிவில் இந்த கீரையின் மருத்துவ குணம் பற்றி காணலாம்
1.மேலும் இந்த கீரை மூலம் வாத நோய்கள் வரும் மாதமான ஐப்பசி முதல் மார்கழி வரை மாதங்களில் நம்மை காக்கின்றன .
2.மேலும் இந்த கீரை மலச்சிக்கல், மூல நோய்கள், கரப்பான், கிரந்தி, பாதவாதம் மற்றும் பல தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்து ,இந்த கீரையை தோசையாகவும் சாப்பிடலாம் .இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்
3. முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம், துவரம் பருப்பு ஆகிவற்றை ஒன்று சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள் .பின்னர் அதை , கிரைண்டரில் அரைக்கவும்.
4.மாவு அரைத்துக் கொண்டிருக்கும் போதே சுத்தம் செய்து, நறுக்கிய முடக்கத்தான் கீரையையும் அதனுடன் சேர்க்கவும்.
5.பிறகு, அந்த மாவுடன் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்து வைக்கவும். இதை 7 மணி நேரம் புளிக்க வைத்து எடுத்து கொள்ளவும் .
6.பின்னர் தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, ஒன்றரை கரண்டி மாவு விடவும் .
7.அந்த தோசையின் ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.