பொதுவாக பாலும் வாழை பழமும் உடலுக்கு நன்மை செய்ய கூடியவைதான் .ஆனால் இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் சில பக்க விளைவு உண்டாகும் .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.பால் குடித்த பிறகு வாழைப்பழம் சாப்பிட விரும்பினால், பக்கவிளைவுகளைத் தவிர்க்க, இரண்டிற்கும் இடையே குறைந்தது 20 நிமிட இடைவெளி விட வேண்டும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
2.ஒவ்வாமை அல்லது ஆஸ்துமா உள்ளவர்கள் பால் மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் அவை சளி மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.
3.பழங்கால இந்திய மருத்துவத்தில் பால் வாழைப்பழங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
4.ஆயுர்வேதத்தில் உள்ள ஒவ்வொரு உணவும் சுவை மற்றும் செரிமானத்திற்குப் பிந்தைய விளைவுகளுடன் வெப்பமயமாதல் மற்றும் குளிரூட்டும் சக்திகளைக் கொண்டுள்ளது.
5.எனவே வாழைப்பழத்தையும் பாலையும் சேர்த்து சாப்பிட்டால் சிலருக்கு இரைப்பை பிரச்சனை வரும்.
6.மேலும், வயிற்றில் வாயு உருவாவது, சைனஸ் பிரச்னை, சளி, இருமல், உடலில் சொறி, வாந்தி, பேதி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.