இன்று ஜூன் 4ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை பெற மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களை மறக்காதீங்க. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் நோக்குடன் நடைபெற்று வருகிறது. இதன் கீழ், மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் இன்று ஜூன் 4ம் தேதி முதல் புதிய பயனாளிகளுக்காக மீண்டும் விண்ணப்பிக்க ஏதுவாக விரிவாக்கம் செய்யப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்காக நாளை ஜூன் 4ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 9000 சிறப்பு முகாம்கள் நடைபெறும் நிலையில் 29ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகின்றன. இதனால் தற்போது மகளிர் உரிமை தொகைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை தெரிவிக்கலாம்.
அதன்படி, ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், இதுவரை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் இவர்கள் இருவரும் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு பெறுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
விண்ணப்பிக்க தேவையான 3 முக்கிய ஆவணங்கள்:
ரேஷன் கார்டு
வங்கி கணக்கு
ஆதார் கார்டு:
வாக்காளர் அடையாள அட்டை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை.
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
அனைத்து ஆவணங்களும் முறையாக தயாராக இருக்க வேண்டும்
முகாம்களில் வரிசை தவிர, ஆவணங்கள் சரிவர இல்லையெனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
எளிதாகப் பயனடைய, முன் ஏற்பாடு செய்தல் அவசியம். இந்த முக்கிய தகவலை உங்கள் சுற்றத்தாருக்கும் பகிருங்கள். திட்ட நன்மையை தெரிந்து கொண்டு, நிதி உதவியை பெற்று பயன்பெறலாம்.