வயசானவருன்னு கூட பார்க்காம இப்படி பண்ணிட்டீங்களே….! அட்ரஸ் கேட்ட வாலிபர்கள்…. அடுத்த நொடியே…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!
SeithiSolai Tamil May 31, 2025 04:48 AM

டெல்லியில் வீட்டு வாசலில் ஒரு முதியவர் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் முதியவரிடம் அட்ரஸ் கேட்பது போல பேசி உள்ளனர். அதன் பிறகு அந்த முதியவர் எதிர்பாராத நேரத்தில் அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி பறித்து விட்டு தப்பி ஓடினர். இதனால் அந்த முதியவர் நிலைதடுமாறி கீழே விழுந்து சத்தம் போட்டார்.

உடனே அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் விரைந்து வந்து முதியவருக்கு உதவி செய்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.