உலக அழகி பட்டத்தை வென்ற தாய்லாந்து பெண்! யார் இந்த ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ?
Newstm Tamil June 01, 2025 12:48 PM

உலக அழகிப்போட்டி இந்தியாவில் நடைபெற்றது. குறிப்பாக தெலங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ மிஸ் வேர்ல்டாக தேர்வாகி உள்ளார். முந்தைய பட்டதாரியான செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பைஸ்கோவா, ஓபலுக்கு மகுடத்தை வழங்கினார்.

108 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களில், எத்தியோப்பியாவின் ஹாசெட் டெரெஜே அட்மாசு முதல் ரன்னர்-அப், போலந்தின் மாயா கிளாஜ்டா மூன்றாவது இடம், மார்டினிக் தீவின் ஒரேலி ஜோசிம் நான்காவது இடம் ஆகிய இடங்களைப் பெற்றனர்.

ஓபல் சுச்சதா, 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று தாய்லாந்தின் ஃபூகெட்டில் பிறந்தார். தம்மசாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படித்து வருகிறார். தாய், ஆங்கிலம் மற்றும் சீனம் ஆகிய மூன்று மொழிகளில் பேசும் திறமை கொண்டவர்.

16 வயதில், மார்பகத்தில் கண்டறியப்பட்ட தீங்கற்ற கட்டி காரணமாக, மார்பக ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வை மேம்படுத்தும் "ஓபல் ஃபார் ஹர்" என்ற சமூகப் பணியில் ஈடுபட்டார்.

மிஸ் வேர்ல்ட் 2025 போட்டி

மிஸ் வேர்ல்ட் 2025 போட்டியில், இந்தியாவின் நந்தினி குப்தா டாப் 8 இடங்களுக்குள் நுழையத் தவறினார். ராஜஸ்தானின் கோட்டா அருகே உள்ள கை தூண் என்ற நகரத்தைச் சேர்ந்த நந்தினி, மிஸ் இந்தியா 2023 பட்டம் பெற்றிருந்தார்.

இந்த வெற்றியின் மூலம், ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ தாய்லாந்தின் முதல் மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இது அவருக்கு மேலும் பெருமையை சேர்த்துள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் உலக அழகி போட்டி, இந்த ஆண்டில் பெரும் விமர்சனத்துடன் இந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் மையத்தில் மே 31 இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்தியாவில் இது 3-வது முறையாக மிஸ் வேர்ல்ட் போட்டி நடைபெறுவதாகும். இதற்கு முன்பு 1996 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் இந்தியா இந்த பெரும் போட்டிக்கு ஒய்விடம் அமைக்கப்பட்டது.

40 பேர் கால் இறுதிக்கு தேர்வு

இந்த ஆண்டின் போட்டியில் உலகம் முழுவதிலிருந்தும் பல நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இறுதியாக, தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுசதா சுவாங்ஸ்ரீ உலக அழகி பட்டத்தை வென்று பெருமை பெற்றார். இவரது வெற்றி தாய்லாந்துக்கு பெரும் வரலாற்றுப் பெருமையாகும், ஏனெனில் இவர் தாய்லாந்தைச் சேர்ந்த முதல் மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்றவர் ஆவார்.

இந்த போட்டியில் இந்தியாவைச் சார்ந்து “மிஸ் இந்தியா 2023” பட்டம் வென்ற நந்தினி குப்தா பங்கேற்றார். பல கட்டத் தேர்வுகளில் திறமைசாலிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர். ஆனால், நந்தினி குப்தா முதலெட்டு இடங்களுக்கு தேர்வாக முடியாமல் விட்டுவிட்டார்.

நேற்று இரவு நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஒபல் சுசதா, அவருடைய அழகு கலந்து பதிலளித்த முறை, நடத்தை, சமூக பங்களிப்பு போன்ற அம்சங்களில் சிறந்து விளங்கினார். இதன் மூலம் அவருக்கு “மிஸ் வேர்ல்ட் 2025” பட்டம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வானது இந்தியாவுக்குப் பெரும் பெருமையையும், தாய்லாந்துக்குப் புதிய வரலாற்றையும் ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.