“ஸ்டேடியத்தில் ஸ்ரேயஸ் ஐயர் போலவே ஆக்ஷன் செய்து நடந்து காட்டி அவரின் தங்கை”… அப்பப்பா ஆக்டிங்க பார்க்கணுமே… இணையத்தில் செம டிரெண்டிங்..!!!
SeithiSolai Tamil June 03, 2025 01:48 AM

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2 போட்டியில், மும்பை இந்தியன்ஸின் 204 ரன்கள் இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக வீழ்த்தியது. பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், 41 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் அடித்து அபாரமாக ஆடியதால், மும்பை அணியின் 200+ ஸ்கோர் சாதனையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

மும்பை அணியின் ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் பிரியாஞ்ச் ஆர்யா துவக்கத்தை நிலைநிறுத்தியதையடுத்து நம்பர் 4-ஆக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், மிகச்சிறந்த வகையில் ரன் சேஸை வழிநடத்தினார். மிகுந்த அழுத்தம் நிறைந்த போட்டியில், அவரது பேட்டிங் பார்வையாளர்களையே பரவசத்தில் ஆழ்த்தியது. போட்டிக்குப் பிறகு, அவரது தாயார் மற்றும் சகோதரி ஸ்டேடியத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்ட வந்தனர்.

 

View this post on Instagram

 

அந்த தருணத்தை படம் பிடித்த கேமராமேன் ஸ்ரேயாஸ் ஐயரின் சகோதரியிடம், அவரை போலவே நடந்துக்காட்டுமாறு கேட்டார். அப்போது, அவரின் சகோதரி ஸ்ரேயாஸ் ஐயரை போன்றே நடந்து காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போட்டிக்குப் பின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், “நான் என் வீரர்களிடம் அதிகமாக பேசுவதில்லை. அவர்கள் தாங்களாகவே யோசனைகளை கொண்டு வரும்படி விட்டு விடுகிறேன். அவர்களிடம் நிறைய அனுபவம் இல்லையென்றாலும், அவர்கள் காட்டும் தைரியம் அவர்கள் சிறப்பாக விளையாட உதவுகிறது” என தெரிவித்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் (RCB) முதல்முறையாக IPL டைட்டிலுக்காக இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.