நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
Webdunia Tamil June 04, 2025 04:48 PM

இந்திய பங்குச்சந்தை நேற்று சரிந்த நிலையில், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை முதல் ஏற்றத்தில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தற்போது 190 புள்ளிகள் உயர்ந்து, 80,904 என்ற பகுதிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

அதே போல், தேசிய பங்குசந்தை நிப்டி 61 புள்ளிகள் உயர்ந்து, 24,590 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

இன்றைய பங்குசந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, HCL டெக்னாலஜி, HDFC வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், இன்போசிஸ், ஐடிசி, ஜியோ பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.

அதேபோல், ஆக்ஸிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டிசிஎஸ், டைட்டான், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.