உலகளாவிய ஸ்டார்ட் அப் மாநாடு கோவையில் நடைபெறுகிறது..!
Newstm Tamil June 04, 2025 04:48 PM

தமிழ்நாடு அரசு 2020-21ல் Startup TN ஐ மீண்டும் தொடங்கியது. தற்போது, மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப்களில் சென்னையில் 40% ஸ்டார்ட அப்களும், மற்ற பகுதிகளில் 60% ஸ்டார்ட அப்களும் உள்ளன.

மாநில அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கோயம்புத்தூர் கொடிசியா வர்த்தக மையத்தில் தமிழ்நாடு உலகளாவிய ஸ்டார்ட்அப் மாநாட்டை அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது.

இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் தங்கள் ஸ்டால்களை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்ட்அப்களுக்கு உலகளாவிய வெளிப்பாடு, தொடர்பு மற்றும் வணிக வாய்ப்புகளை வழங்குவதற்காக கோயம்புத்தூரில் உலகளாவிய மாநாட்டை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது

ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள், ஆர்வலர்கள், இன்குபேட்டர்கள், கல்வி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், தொழில் அமைப்புகள், வழிகாட்டிகள், அரசு நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் உட்பட 30,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்கும்".

மாநில அரசு இந்த மாநாட்டை கோயம்புத்தூரில் நடத்துவதன் முக்கிய நோக்கம், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உலகளாவிய அளவில் ஒரு வெளிப்பாட்டை ஏற்படுத்தி, அதன் மூலம் அவர்களுக்கு புதிய தொடர்புகளையும், வணிக வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுப்பதே ஆகும்.

இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாடு, உலக அளவில் சிறந்த ஸ்டார்ட்அப் சூழலியல் அமைப்புகளில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்.

இந்த மாநாட்டில் அரசு அதிகாரிகள் மற்றும் பல முக்கிய பங்குதாரர்கள் என சுமார் 30,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கோவை மாவட்டம் அவர்களிடையே கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.