இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி சுற்றுக்கான போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
இந்த போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி பெங்களூர் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 14.1 ஓவரில் 101 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பெங்களூர் அணியை சேர்ந்த 20 வயதான முஷீர் கான் என்ற இளம் வீரர் முதல்முறையாக களமிறங்கினார்.
இவர் 3 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். முன்னதாக இவர் பேட்டிங் செய்ய வந்தபோது பில்டிங் நின்று கொண்டிருந்த விராட் கோலி அந்த வீரரை பார்த்து யார்ரா இவன் என்பது போல் சைகை காட்டினார்.
அந்த வீரரை பார்த்து வாட்டர் பாய் என்று ஸ்லெட்ஜிங் செய்ததாக சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து தெரியவில்லை. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தீவிரமாக பரவி வரும் நிலையில் விராட் கோலி இளம் வீரரை பார்த்து இப்படி செய்தது தவறு என பலரும் கூறி வருகின்றனர்.