“2 வயசு மகனுடன் வெளியே நின்று கொண்டிருந்த கணவன்”… திடீரென கதவை பூட்டிய மனைவி… பலமுறை தட்டியும் திறக்கல… துப்பட்டாவால்… பதற வைக்கும் சம்பவம்..!!!!
SeithiSolai Tamil June 02, 2025 02:48 AM

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தறிப்பட்டறை வைத்து நடத்திவரும் நிலையில் திருமணமாகி ஜமுனாதேவி (30) என்ற மனைவியும் இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் லோகநாதன் நேற்று முன்தினம் தன்னுடைய மகனை தூக்கிக்கொண்டு வெளியே வந்த நிலையில் திடீரென ஜமுனாதேவி ஒரு அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.

இதனை கவனித்த லோகநாதன் உடனடியாக அறையை திறக்குமாறு கதவை தட்டியுள்ளார். இதனையடுத்து லோகநாதன் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த நிலையில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் ஜமுனாதேவி கிடந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த லோகநாதன் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து தன் மனைவியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஜமுனா இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் மட்டுமே ஆகும் நிலையில் திடீரென ஜமுனாதேவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.