தென்கொரியாவின் குமி நகரில் நடைபெற்று வரும் 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில், 43 நாடுகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர். 59 பேர் கொண்ட இந்திய அணியில், தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 400 மீ தடைதாண்டும் ஓட்டப் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் பங்கேற்று, 56.46 வினாடிகளில் முடித்து மூன்றாவது இடம் பெற்றார். இதனால் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
கால் வீக்கத்துடன் போட்டியில் பங்கேற்று வெண்கலத்தைக் கைப்பற்றிய வித்யாவுக்கு, அவரது இரட்டை சகோதரி நித்யா இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் வித்யாவை பாராட்டி வருகின்றனர்.