ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படும் NPS வத்சல்யா திட்டம், சிறார்களுக்கு தேசிய ஓய்வூதிய முறை (NPS) கணக்கை வைத்திருக்க அனுமதிக்கும் ஒரு முயற்சியாகும்., NPS வத்சல்யா திட்டம் மூலம், பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் இப்போது தங்கள் குழந்தைகளுக்கான ஓய்வூதிய நிதியை சிறு வயதிலிருந்தே உருவாக்கத் தொடங்கலாம். இதன் மூலம் 60வது வயதிலிருந்து வாழ் நாள் முழுவதும் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறலாம்
NPS வத்சல்யா திட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறார் உட்பட எந்த இந்தியக் குடிமகனும் சேரலாம். குழந்தை 18 வயதை அடையும் வரை இந்தக் கணக்கை பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் திறந்து நிர்வகிக்க வேண்டும். மைனர் வயது வந்தவுடன், கணக்கு அவர்களின் பெயருக்கு மாற்றப்படும், இதன் மூலம் அவர்கள் அதை சுயாதீனமாக நிர்வகிக்கவும் பங்களிக்கவும் முடியும். இதில் பங்களிப்புகளை பாதுகாவலர் தொடர்ந்து செலுத்தலாம். குறைந்தபட்ச வருடாந்திர பங்களிப்பு ரூ. 1,000 ஆக இருக்க வேண்டும்.
கணக்கை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் திறக்கலாம். பல வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிதி சேவை வழங்குநர்கள் இந்த வசதியை வழங்குகிறார்கள். ஆன்லைன் தளங்கள் எளிதாக கணக்கை திறக்க உதவுகின்றன. ஆஃப்லைன் பதிவுக்கு பொதுவாக ஆவணங்கள் மற்றும் படிவங்களை சமர்ப்பிக்கும் நடைமுறை தேவைப்படுகிறது.
பெற்றோர் அல்லது பாதுகாவலர் தங்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று (ஆதார், பான் போன்றவை), மைனரின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். பாதுகாவலருக்கும் மைனருக்கும் இடையிலான உறவைக் கூறும் சான்று ஆவணங்களும் தேவை.
NPS வாத்சல்யா திட்டத்தின் கீழ், குழந்தை 18 வயதை அடைவதற்கு முன்பு பகுதி பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது. பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் கணக்குத் தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரே பணத்தைத் திரும்பப் பெற முடியும். அவர்கள் செலுத்திய பங்களிப்புகளில் 25% வரை பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் கணக்கின் காலத்தில் மூன்று முறை மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும். குழந்தையின் கல்வி, 75% க்கும் அதிகமான இயலாமை அல்லது குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சை போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்காக பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது, PFRDA ஆல் வரையறுக்கப்பட்டுள்ளது.
NPS வாத்சல்யா திட்டம் 9.5% முதல் 10% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. இருப்பினும், நிலையான வருமான விகிதம் எதுவும் இல்லை, மேலும் இது பல காரணிகளைப் பொறுத்து ஏற்ற இறக்கமாக இருக்கலாம்.
NPS வாத்சல்யா திட்டத்தில், குழந்தை பிறந்த உடன் கணக்கைத் திறந்து, மாதம் ரூ.1000 முதலீடு செய்து வரும் நிலையில், குழந்தையின் 60 வயது வரை இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.1000 என்ற அளவிலான முதலீட்டைத் தொடர்ந்தால், 60 வயது வரை செய்த மொத்த முதலீடு ரூ.7,20,000 என்ற அளவில் இருக்கும். இதில் அவருக்கு 10% வருமானம் கிடைத்தால் கூட, ரூ.3,77,61,849 என்ற அளவில் வட்டி வருமானம் கிடைக்கும். இதன் மூலம் கிடைக்கும் மொத்த காபர்பஸ் ரூ.3,84,81,849 (ரூ.3.8 கோடி) என்ற அளவில் இருக்கும்.
ரூ.3.8 காபர்பஸ் கிடைத்த நிலையில் குறைந்தது 40% தொகையை, அதாவது ரூ.1,53,92,740 என்ற அளவில் வருடாந்திரத் திட்டத்தில் முதலீடு செய்தால், அவர் அன்யுட்டி முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இதில் நீங்கள் குறைந்த பட்சமாக 8% வருடாந்திர வருமானத்தைப் பெற்றால் கூட, ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ரூ.1,02,618 பெறலாம்.
NPS திட்டத்தில் முதலீடு செய்வதன் வரிச் சலுகை :
NPS வாத்சல்யா கணக்கில் பங்களிப்பு செய்யும் பெற்றோர்கள் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80CCD(1B) இன் கீழ் வரிச் சலுகைகளைப் பெறலாம். இந்தத் திட்டத்திற்கான பங்களிப்புகளுக்கு பிரிவு 80C இன் கீழ் அனுமதிக்கப்பட்ட ரூ.1.5 லட்சம் வரம்பிற்கு மேல் ரூ.50,000 கூடுதல் விலக்கு கோர அவர்கள் தகுதியுடையவர்கள்.