இந்த வெற்றி, இந்திய ராணுவத்தின் பயிற்சியையும், வலிமையையும் உலகிற்கு எடுத்துக்காட்டியது. அத்துடன் இந்தியாவின் பாதுகாப்பில் உறுதியாக இருப்பதை இது நிரூபித்தது.
எனவே, இந்திய ராணுவம் குறித்து பிரதமர் மோடி தொடர்ச்சியாகவே புகழ்ந்து பேசிக்கொண்டு வருகிறார். அந்த வகையில், மத்தியப் பிரதேசம் போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் “வீரத்தின் அடையாளம் குங்குமம்” என பேசியுள்ளார்.
இது குறித்து ”வீரத்தின் அடையாளம் குங்குமம்” என்று குறிப்பிட்டு, இந்திய ராணுவத்தின் வீரத்தையும், பயங்கரவாதத்திற்கு எதிரான அவர்களின் துணிச்சலான செயல்களையும் பாராட்டினார்.
குறிப்பாக, பாகிஸ்தான் எல்லையில், எதிர்பாராத பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அளித்தது. திறமையாக செயல்பட்ட இந்திய ராணுவத்திற்கு என்னுடைய பாராட்டுகள். பெண் சக்தியின் சின்னமான குங்குமம், இப்போது வீரத்தின் அடையாளமாக மாறிவிட்டது என கூறி பெண்களின் வலிமை மற்றும் தியாகத்தின் சின்னமாகக் குறிப்பிட்டுள்ளார்.