வைரல் வீடியோ... அந்த மனசு தான் சார் கடவுள்... அழுகிய நிலையில் உரிமை கோரப்படாத உடல்… தானே எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்!
Dinamaalai June 04, 2025 03:48 AM

 

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அப்படியான  சில வீடியோக்கள் சிரிக்க வைக்க கூடியதாகவும்,  சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.
 


அதாவது ஒரு வீட்டில் ஜான்சி என்பவர் உயிரிழந்து கிடந்தார். இவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதனால் துர்நாற்றம் வீசவே அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

நீண்ட நாட்களாக அந்த உடலுக்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனையடுத்து  அந்த உரிமை கோரப்படாத உடலை அடக்கம் செய்ய ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் கொடுத்து சடங்குகளை செய்யும்படி கூறினர். பின்னர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அந்த உடலை ஒரு துணியில் சுற்றி பின்னர் ஆம்புலன்ஸில் ஏற்றி அடக்கம் செய்யப்படும் மைதானத்தை அடைந்தார்.
அதன் பின்ன அவர் ஆம்புலன்ஸில் இருந்து சடலத்தை ஒரு சாக்கு பையை போல இழுத்து வெளியே எடுத்துச் சென்று பின்னர் 100 மீட்டர் தொலைவில் முதுகில் சுமந்து தானே இறுதி சடங்குகளை சிறப்பாக செய்து முடித்தார். இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது  பாராட்டுக்களை  தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.